சைட்டம் தனியார் பல்கலைகழகத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

220 0
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான மாணவ போராட்டம் தனிப்பட்ட பிரச்சினை அல்ல என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது.
அது ஒரு பொது பிரச்சினை என அந்த கட்சியின் முதன்மை செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிரான போராட்டம் மக்களின் போராட்டமாகும்.
அரசாங்கம் அதனை புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களின் போராட்டத்தை தடுப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியாது.
இலங்கையில் இடம்பெறுகின்ற போராட்டங்களை கட்டுப்படுத்துவது என்பது அதனை மேலும் வலுப்பெற செய்வதேயாகும்.
எனவே மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற இந்த போராட்டத்திற்கு அரசாங்கம் செவி சாய்த்து, சைட்டம் தனியார் பல்கலைகழகத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜே.வீ.பியின் முதன்மை செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a comment