கண்ணி வெடிகளின் தாக்கங்களற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பை உருவாக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கண்ணி வெடிகள் அகற்றும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்ணிவெடிகளின் ஆபத்துக்களை குறைக்கும் முயற்சிகளின் மைல் கல்லாக இது விளங்குகிறது.
இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கும், கணக்கெடுப்பு, அபாயக் கல்வி மற்றும் செயல்திறனைக் கட்டியெழுப்பவும் 53 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க வழங்கியுள்ளது.
கண்ணி வெடிகளை அகற்றும் இலக்கை அடைய, பல உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் தாம் பெருமையடைவதாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.