பிரித்தானிய – ஐரொப்பிய விவாகரத்தின் பின்னர் விசேட சலுகை

241 0

பிரித்தானியாவில் தங்கியுள்ள ஐரோப்பிய நாடுகளின் பிரஜைகளுக்கு, பிரித்தானிய – ஐரொப்பிய விவாகரத்தின் பின்னர் விசேட சலுகை வழங்கப்படவுள்ளது.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேய் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய – பிரித்தானிய விவகாரத்துக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்த விவாகரத்தின் பின்னர், பிரித்தானியாவில் தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்கியுள்ள ஐரோப்பியர்களின் நிலைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இதன் பின்னரும் அவர்களுக்கு பிரித்தானியர்களுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Leave a comment