பிணை முறி விநியோகம் விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரக் காலம் நிறைவடைகிறது.

249 0

நடப்பு அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரக் காலம் அடுத்த மாதம் 27ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இந்த ஆணைக்குழுவில் குழுவில் இதுவரையான காலப்பகுதியில் 32 பேர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அதன் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் வழங்கியவர்களுள் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் தனியார் துறை அதிகாரிகள் பலரும் உள்ளடங்குகின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment