சர்வதேச இசைக்கொண்டாட்ட நாளில் பேர்லின் நகரில் ஈழத்து சிறுவர்களின் இசைக் கச்சேரி

455 0

சர்வதேச இசைக்கொண்டாட்ட நாளையொட்டி (Fête de la Musique) நேற்றைய தினம் பேர்லின் நகரில் மக்கள் அதிகமாக நடமாடும் பொது வெளியரங்குகளில், பல்லின கலைஞர்கள் பொதுநலச் சேவையாக தமது இசைக் கச்சேரியை அரங்கேற்றி அனைத்து மக்களுக்கும் இலவசமாக காண்பித்து மகிழ்வித்தனர்.

அந்தவகையில் அனைத்துலக இசைக் கல்லூரியின் (Global Music Academy) ஒருங்கிணைப்பில் அங்கு நடைபெற்ற இசைவிழாவில் ஈழத்துச் சிறுவர்களும் தமது இன பண்பாட்டு அடையாளங்களை பல்லின மக்களுக்கு வெளிப்படுத்தும் முகமாக தமிழர் கலாச்சார உடையணிந்து கலந்துகொண்டு தமிழில் பாடி பல்லின மக்களின் அமோக வரவேற்பை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment