ஆளுநர் செயலகத்தின் முன்னால் பகுதி நேர ஆங்கில ஆசிரியர்கள் போராட்டம்

245 0
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நேர்முக தேர்வில் தோற்றி கடந்த 2011 ம் ஆண்டிலிருந்து பகுதி நேர ஆசிரியர்களாக கடமை யாற்றி வரும்ஆங்கில ஆசிரியர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்கள்.
நாளொன்றுக்கு 150 ரூபா வீதம் 3000 ரூபாவே இந்த ஆசிரியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகின்றது என தெரிவித்த போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் தம்மை கடமையில் இணைக்கும் போது மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக கடமையாற்றினால் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தும் இன்று வரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும்,எனவே கௌரவ ஆளுநர் இந்த விடயத்தை கருத்திற் கொண்டு தமது நிரந்தர நியமனம் பெற்று தர உதவ வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Leave a comment