நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளுநரிடமே கையளிக்கப்படவேண்டுமாம் – சி வி கே சிவஞானம்

353 0
நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுநரிடமே கையளிக்கவேண்டும் கூறுகின்றார் சீ.வீ.கே.சிவஞானம்
நம்பிக்கையில்லாப் பிரேரணை அவைத்தலைவரிடம் கையளிக்கப்படுவதில்லை. அது ஆளுநரிடமே கையளிக்கப்படவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண அவைத்தலைவரிடமே நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்படவெண்டும். ஆனால் இங்கு அவைத் தலைவர் ஆளுநரிடம் கையளித்துள்ளார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சுமத்திய குற்றசாட்டுத் தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அவைத் தலைவர் என்ற கடமையில் இருந்து நான் நடுநிலை தவறியதாக இதுவரை யாரும் சொல்லவில்லை. நான் அப்படி நடக்கவும் இல்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறவேற்றுவது கட்சித் தீர்மானம். கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் அந்த நடவடிக்கை கட்சியின் கட்டுப்பாட்டுக்க அமையச் செய்யப்பட்டது.
முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது மாகாண சபையில் விவாதிக்கப்படமுடியாது. அதற்கான மரபோ சட்டமோ இல்லை. அவ்வாறு நம்பிக்கையீனமான நிலை ஏற்படுத்தப்படும் பொருட்டு அந்த முறற்பபாடு ஆளுநரிடமே சமர்ப்பிக்கப்படவேண்டும். ஆளுநர் அவர் மேல் பொருத்தமான நடவடிக்கை எடுப்பார்.
அதிலும் முக்கியமான ஆளுநர் முதலமைச்சரை மாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்கக் கூறுவார். அப்படி கோரும்போது முதலமைச்சர் ஒருவரின் நம்பிக்கைப் பிரேரணையை சபையில் தாக்கல் செய்வார்.  அப்போது தான் அந்தப் பிரேரணை விவாதித்து வாக்கெடுப்புக்கு விடப்படும். சபையிலே நம்பிக்கையில்லாப் பிரரேரணை என்பது இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமே உண்டும். எனவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவைத்தலைவருக்குச் சமர்ப்பிப்பது என்பது நடைமுறை இல்லை. ஆளுநரின் பணிப்பின் பேரில் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதுதான் நடைமுறை என்றார்.

Leave a comment