சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முன் கூச்சலிட்டது ஏன் என ஆராய வேண்டும் – மகிந்த ராஜபக்ஷ

321 0

mahinda-rajapaksa-மகிந்த தரப்பு பேரணியின் போது ஹொரகொல்லயில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அஞ்சலி செலுத்தியவர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக கூச்சலிட்டது ஏன் என்று, கட்சித் தலைவர்கள் ஆராய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ இதனை கோரியுள்ளார்.

நாராயன்பிட்டி – அபேயாராம விகாரையில் நேற்று இடம்பெற்ற வழிப்பாட்டு நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு திட்டமிட்டு செய்யப்பட்ட தரப்பினருடைய செயற்பாடாக இருக்கலாம்.

கட்டிடம் ஒன்றுக்கு கூக்குரல் இட்டு பிரயோசனம் இல்லை.

ஹொரகொல்லையில் மரியாதை செலுத்திய தரப்பினர் கட்டிடம் ஒன்றுக்கு கூக்குரல் இட்டமைக்கான காரணம் என்ன என்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.