3 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் கைது!

232 0

எல்பிட்டிய – நுகேகொடை பிரதேசத்தில் 3 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை மற்றும் தாக்குதல் நடத்தியை தொடர்பிலான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

நேற்று (17) மாலை எல்பிட்டிய – நுகேகொடை பிரதேசத்தில் காணி பிணக்கு ஒன்று காரணமாக 3 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மேலும் இருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் காராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment