நாட்டில் கிறிஸ்தவ சமயஸ்தலங்கள் தாக்கப்படவில்லை- காடிணல் மெல்கம் ரஞ்சித்

256 0

கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதத்தலங்களுக்கு அண்மைக்காலமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என காடிணல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தரப்பினரையும் தாக்குவதற்கும், தாழ்வாக கவனிப்பதற்கும் மதங்களை கைப்பொம்மையாக பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவ்வாறான செயல்பாடுகளை மேற்கொள்வார்களானால் அது நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் இனவாதிகளினால் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பலராலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்

Leave a comment