தமிழரசு கட்சியினருக்கும் யாழ் ஆயருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது

235 0
தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் யாழ் மறைமாவட்ட ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசத்திற்கும் இடையில்  சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.
தற்போது ஏற்பட்டுள்ள முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாதீர்மானம் தொடர்பாக விளக்கமளிப்பதற்கான சந்திப்பே இடம்பெறுகின்றது.யாழ் ஆயரின் இல்லத்தில் இடம்பெறும் இச் சந்திப்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வட  மாகாணசபை உறுப்பினர்களான சத்தியலிங்கம் மற்றும் அரியரட்ணம்,பரஞ்சோதி சிவயோகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a comment