மாங்குளம் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நீதி அமைச்சரினால் நாட்டப்பட்டுள்ளது

214 0

மாங்குளத்தில்  அமைய உள்ள புதிய  நீதிமன்றக் கட்டடத்திற்கான  அடிக்கல்  நாட்டும்  வைபவம்  இன்று காலை  ஒன்பது முப்பது மணியளவில் இடம்பெற்றது.

நீதி மற்றும் பௌத்தசாசன  பிரதி அமைச்சர்  எச் .ஆர் . சாரதீ  துஸ்மந்த  மித்திரிபால  அவர்களின்  பங்குபற்றலிலும்  நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சர்  விஜயதாச  ராஜபக்ச  அவர்களினால்  இவ்  அடிக்கல்  நாட்டப்பட்டுள்ளது.
இன்  நிகழ்வில்  அமைச்சர்கள் ,அமைச்சின் செயலாளர்கள் ,முல்லைத்தீவு  அரசாங்க அதிபர் , நீதிபதிகள் ,சட்டத்தரணிகள் , நீதிமன்றப் பணியாளர்கள்  மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment