முதலமைச்சரின் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க முயற்சிக்கின்றோம் – செல்வம் அடைக்கலநாதன்

221 0
தமிழீழ விடுதலை அமைப்பு கழகம் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வடக்கு மாகாண முதல்வரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது தற்போது உருவெடுத்துள்ள முதலமைச்சர் விவகாரத்தினை சுமூகமாக தீர்ப்பது தொடர்பாக முதல்வருடன் பேசி உள்ளதாக தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் இதன் பின்னர் கூட்டமைப்பின் பங்காளி கட்சியினருடன் நான் பேச்சுவார்த்தை நடாத்தி அதன் பின்னர் மீண்டும் முதலமைச்சரை பங்காளி கட்சியினர் சந்திக்கவுள்ளோம் எனினும் இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முடியும் என நம்புகிறோம் என தெரிவித்த செல்வம் எம் பி. கூட்டமைப்பு பிளவு படுவதை ஏற்றுகொள்ள முடியாது எனவும் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Leave a comment