திருகோணமலை – ரொட்டவௌ பிரதேசத்தில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவற்துறை விஷேட சோதனை நடவடிக்கையின் போது, துப்பாக்கி ரவைகள், 284 ஈய குண்டுகள் என்பன நேற்று மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் 54 மற்றும் 45 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரும் இன்று திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

