வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக இன்று கிளிநொச்சி பரந்தன் ஆகிய பகுதிகளில் கதவடைப்பு போராட்டம் (காணொளி)

14015 318

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலரின் செயற்பாடுகளைக் கண்டித்து இன்று வடக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டிலான இன்றைய ஹர்த்தாலினால் கிளிநொச்சி பரந்தன் ஆகிய பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

கதவடைப்பு போராட்டத்தினால் பாடசாலைகளும் செயலிழந்துள்ளதாக கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார்

Leave a comment