பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டின் பிரதான சந்தேக நபர் கைது

232 0

பிலியந்தலை பிரதேசத்தில் காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சிலரின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மெதிரிகிரிய பிரதேசத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 10 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

மிரிஹான விஷேட குற்றத் தடுப்பு விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மிரிஹான காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காவற்துறை அதிகாரி ஒருவர் மற்றும் சிறுமியொருவரும் உயிரிழந்தனர்.

மேலும் இரண்டு அதிகாரிகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

இந்த தூப்பாக்கிச் சூட்டின் போது உந்துளியை செலுத்தியவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளவர் என தெரியவந்துள்ளது.

27 வயதான இந்த சந்தேக நபர் தர்கா நகர் – குருந்த வீதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று மதுகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Leave a comment