அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவை வழங்கச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

208 0

களுத்துறை தெற்கு – சேரபிட்டிய பிரதேசத்தில் படகு கவிழ்ந்ததில் நபரொருவர் காணால் போயுள்ளார்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவை வழங்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை இந்த விபத்து இடம்பெறும் போது அந்த படகில் தேரர் ஒருவர் உள்ளிட்ட 4 பேர் இருந்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போயுள்ளவர், சேரபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

படகு கவிழ்ந்த பின்னர் அதில் இருந்த தேரர் உள்ளிட்ட ஏனையவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணால் போயுள்ள நபரை தேடி, காவற்துறை உயிர் காப்பு பிரிவின் அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.