இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்வடைந்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது.
அனர்த்தங்களினால் 111 பேர் காயமடைந்துள்ளனர்.
88 பேர் தொடர்ந்தும் காணாமல் போனவர்களாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளம், மண்சரிவு, காற்று காரணமாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 565 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 38 ஆயிரத்து 295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 20 ஆயிரத்து 670 குடும்பங்களைச் சேர்ந்த 86 ஆயிரத்து 316 பேர் 290 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.