இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை (25) காலை திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
நேற்றைய தினம் விசேட உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு வருகை தந்த குழுவினர் இன்றைய தினம் காலை ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
அத்துடன் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் சுற்றுப்புறங்களையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

