பசறை, பல்லகெடுவ, கலபிடகந்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு விசாரணையின் வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கலபிடகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

