தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம மற்றும் தொடங்கொடைக்கிடைப்பட்ட பரகஸ்தொட்டை பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கெப் வாகனம் மற்றும் இரண்டு கார் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் மூன்று வாகனங்களும் மாத்தறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவரும் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

