டெல்லி ஏஐ மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க புர்ஜ் கலீபாவில் ஜொலித்த மூவர்ண கொடி

13 0

டெல்​லி ஏஐ உச்சி மாநாடு இன்​றுடன் முடிவடைகிறது. இந்த மாநாட்​டில் பல நாடு​களும், பல தலைமை செயல் அதி​காரி​களும் (சிஇஓ) பங்​கேற்​றுள்​ளனர். மாநாட்​டில் நேற்​று​முன்​தினம் 19-ம் தேதி பிரதமர் மோடி உரை​யாற்​றி​னார்.

இந்​நிலை​யில், ஐக்​கிய அரபு அமீரகத்​துக்​கும் இந்​தி​யா​வுக்​கும் இடை​யில் உள்ள நட்​புறவை வெளிப்​படுத்​தும் வகை​யிலும், ஏஐ மாநாட்​டுக்கு ஆதரவு தெரிவிக்​கும் வகை​யிலும் உலகின் மிகப்​பெரிய கட்​டிட​மான புர்ஜ் கலீ​பா​வில் இந்​திய தேசி​யக் கொடி​யின் மூவர்​ணம் மின்​விளக்​கு​களில் காட்​சிப்​படுத்​தப்​பட்​டது.

இதற்கு அமீரகத்​தில் உள்ள இந்​திய தூதரகம் பாராட்டு தெரி​வித்​துள்​ளது. “இந்​தியா – யுஏஇ இடையே உள்ள உறவை காட்​டும் சக்​தி​வாய்ந்த சின்​னம் இது” என்று இந்​திய தூதரகம் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது.

புர்ஜ் கலீபா கட்​டிடத்​தில் மூவர்ண கொடி ஜொலிக்​கும் படத்தை வெளி​யிட்டு ‘இந்​திய ஏஐ மாநாட்டை உலகின் மிக உயர்ந்த கட்​டிடம் கொண்​டாடு​கிறது’ என்ற படவிளக்​கத்​துடன் இந்​திய தூதரகம் வெளி​யிட்​டுள்​ளது. இந்​தப் படத்​தைப் பார்த்து பலரும் பா​ராட்​டு தெரி​வித்​து வருகின்​றனர்​.