சீகிரிய, பிதுரங்கலை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
64 வயதுடைய குறித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி, தனது மனைவியுடன் நடந்துச்செண்றுக்கொண்டிருந்த போதே இவ்வாறு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
யானைத் தாக்குதலால் படுகாயமடைந்த அவர் உடனடியாக சீகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

