மனித உரிமைகள் ஆணையகத்தின் 61 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்திர தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 1202.2026 அன்று பிரித்தானியாவில் ஆரம்பமான மனிதநேய ஈருருளிப் பயணமானது இன்று மதியம் 13:30 மணியளவில் நெதர்லாந்து – பெல்சிய எல்லையினை அடைந்து.
வுர்வேசல் என்னும் இடத்தில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணமானது அன்வேர்பனில்(Antwerpen) அமைந்துள்ள மாவீரர் நினைவுக்கல்லறயில் மாலை 16:40 மணியளவில் சென்றடைந்துள்ளது. நாளை காலை 8 மணியளவில் அதே இடத்தில் ஆரம்பித்து ஈருருளிப் பயணமானது பெல்ஜியம், யேர்மனி, பிரான்சினை கடந்து தொடர்ந்து ஜெனிவாவை சென்றடையும்.





