“உலக விவகாரங்களில் அதிக செல்வாக்கு செலுத்தும் “மிகவும் வெற்றிகரமான” வளர்ந்து வரும் பொருளாதாரம் இந்தியா. எனவே ஏஐ (AI) உச்சிமாநாட்டை நடத்த சரியான இடம் இதுதான்” என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 20 வரை நடைபெறும் இந்தியா- ஏஐ தாக்க உச்சி மாநாடு, உலகத் தெற்கில் நடத்தப்படும் முதல் AI உச்சி மாநாடாகும். இது ‘மக்கள், உலகம் மற்றும் முன்னேற்றம்’ என்ற மூன்று வழிகாட்டும் கொள்கைகளுடன் நடத்தப்படுகிறது.

