முதலமைச்சரால் கிளிநொச்சியில் குடிநீர்த்திட்டம் திறப்பு

253 0

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைநிதி (PSDG)   ரூபாய் 4.5 மில்லியன் ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள  சுமார்  நூற்றி ஐம்பது குடும்பங்களின் பாவனைக்கு அமைக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் வடமாகாண  முதலமைச்சர் வி.விக்னேஸ்வரன் அவர்களினால் இன்று  முற்ப்பகல்  11.30 மணியளவில்  மக்கள் பாவனைக்கு சம்பிரதாய பூர்வமாக மக்கள் பாவனைக்குத்  திறந்து வைக்கப்பட்டுள்ளது

இன்  நிகழ்வில் வடமாகாண  முதலமைச்சர் வி.விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்  சி .சிறிதரன் வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை  வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் பல முக்கியஸ்தர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.