திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

275 0

திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் ஆசிரியர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை  போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று இம்மூவரும்
கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்த  கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது .

இந்நிலையில், சந்தேக நபர்கள் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.