ஹெய்யந்துடுவ பகுதி வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் 2 பெண்கள் பலி

252 0

சப்புகஸ்கந்த – ஹெய்யந்துடுவ  பகுதியில் வீடொன்றில் மண்சரிவு இடம்பெற்றுள்ளது. மேலும் சுவரும் இடிந்து விழுந்துள்ளது.

இதில் 2 பெண்கள் பலியாகினர்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபடியாக  இரத்தினபுரி  மாவட்டத்தில் 196.7 மில்லி மீற்றர்  மழை  பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல், தென், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்துள்ளது.