குளச்சல் துறைமுகம் தொடர்பில் மீள் பரிசீலனை

293 0

kulachal-port-in-nagercoil-kanyakumariகொழும்பு துறைமுகத்துக்கு போட்டியாக தமிழ் நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள துறைமுகம் குறித்து மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் இந்த துறைமுகம் 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் நிர்மாணிப்பதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கி இருந்தது.

ஆனால் இந்த வேலைத்திட்டத்துக்கு ஏனைய மாநிலங்களில் இருந்தும், உள்ளுர் மீனவர்களாலும் எதிர்ப்புகள் வெளியாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மீனவப் பிரதிநிதிகளை சந்தித்த இணை அமைச்சர், இந்த துறைமுகம் குறித்து மீளாய்வு செய்து, அதன் அமைவிடம் குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டால், அது கொழும்பு துறைமுகத்துக்கு போட்டியாக அமையும் என்று, இந்தியாவின் ஊடகங்கள் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.