கடும் மழை, காற்றை பொருட்படுத்தாமல் சுகாதார தொண்டர்கள் தமது நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி இன்று 22வது நாளாக தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
வடக்கில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய சுகாதார தொண்டர்களே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக நடைபெறும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்கள், தங்களுக்கு ஏதாவதொரு நல்ல முடிவினை தந்துதவுமாறு அரசாங்கத்தினை கேட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று பெய்த காற்றுடுன் கூடிய மழையின்போது போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கொட்டகையின் தகரங்கள் தூக்கியெறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.