தாய்பாலூட்டல் – இலங்கைக்கு முதலிடம்

316 0

motherbabyஇலங்கையில் தாய்ப்பாலூட்டல் வாரம் அமுலாக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் இந்த விசேட பாலூட்டல் வாரம் அமுலாக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய்ப் பாலூட்டலில் ,லங்கை சர்வதேச அளவில் முன்னிலையில் இருக்கிறது.

உலகின் 121 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் இலங்கைக்கு முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 92 சதவீதமான தாய்மார்கள் தமது குழந்தைக்கு பாலூட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் கியுபா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இந்த அளவை 96 சதவீதமாக கூட்டுவதே தற்போதைய இலக்கு என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.