யேர்மன் சோலிங்கன் நகரவாழ் தாயக உறவுகளின் உதவி அம்பாறை மாவட்ட மக்களுக்கு.

26 0

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- யேர்மன் சோலிங்கன் நகரவாழ் தாயக உறவுகளின் உதவித்திட்டம்.
அம்பாறை மாவட்டம்: இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 23/12/2025 அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கட்பட்ட வாச்சுக்குடா கிராமத்தைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாமில் தங்கியிருந்து வீட்டிற்கு மீளச்சென்ற தொழில் வாய்ப்பில்லாத 50 குடும்பங்களிற்கு யேர்மனி சோலிங்கநகர வாழ் தாயக உறவுகளால்
உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அரிசி கோதுமைமா,சீனி, தேயிலை,பருப்பு, சோயா போன்ற உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.பயன்பெற்ற மக்கள் அனைவரும் யேர்மன் வாழ் தாயக உறவுகளிற்கு நன்றி தெரிவித்தனர்.