இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய தமிழக மீனவர்கள் 6 பேர் நேற்று இரவு கைது (காணொளி)

392 0

 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 6 பேர்காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து நேற்று மாலையில் ஒரு படகில் புறப்பட்ட குறித்த 6 இந்திய மீனவர்களும் காரைநகர் கடற்பரப்பில் கோகுலம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் தமிழகம் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மீனவர்கள் பயணித்த படகும் கடற்படையினரின் பராமரிப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மீனவர்கள் இன்றைய தினம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும்

அவ்வாறு கையளிக்கப்படும் மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.