அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழ அகதிகளுக்கு கால அவகாசம்

244 0

அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் தங்களை நியாயமான அகதிகள் என்று நிரூபிக்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

ஈழ அகதிகள் உள்ளிட்ட 7ஆயிரத்து 500க்கும் அதிகமான அகதிகள் அவுஸ்திரேலியாவில், அகதி அந்தஸ்த்துக்காக விண்ணப்பிக்காமல், அல்லது தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் இருக்கின்றனர்.

அவர்கள் குறித்த காலப்பகுதிக்குள் தங்களை நியாயமான அகதிகள் என்று நிரூபிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அல்லாத பட்சத்தில் அவர்கள் விரைவாக நாடுகடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.