நுவரெலியா வலகா மற்றும் அக்கரகந்தை ஆகிய தோட்டங்களில் நள்ளிரவு வேளையில் திருட்டுக்கள் (காணொளி)

275 0

நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலகா மற்றும் அக்கரகந்தை ஆகிய தோட்டங்களில், நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர்கள் வீடுகளுக்கு நுழைந்து, பெண்களிடம் தங்க சங்கிலிகளை திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அக்கரகந்தை தோட்டத்தில் ஒரு இலட்சம் பெறுமதியான தங்க நகைகளும் வலகா தோட்டத்தில் 20 ஆயிரம் பெறுமதியான நகைகளும் திருடப்பட்டுள்ளதாக, உறவினர்கள் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறான மர்மமான முறையில் கதவு மற்றும் யன்னல்களை உடைத்து வீடுகளுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை மலையக பிரதேசங்களில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில், தோட்டப்புறங்களில் உள்ள வீடுகளை உடைத்து பொருட்களை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் மலையகத்தில் தொடராமல் இருக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.