வடமாகாண தொண்டர் ஆசிரியர்களின் போராட்டம் நிறைவு

366 0

teacher-1-670x502வட மாகாண தொண்டர் ஆசிரியர்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்க கோரி இவர்கள் கடந்த 2 நாட்டிகளாக யாப்பாணத்தில் போராட்டத்தை நடத்திவந்தனர்.

இந்தநிலையில் இன்று அவர்களை சந்தித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கிய உறுதிமொழியை அடுத்தே போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.

தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் ஆயிரத்து 129 பேரினதும் விபரங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி அமைச்சரவையின் அங்கிகாரத்தை பெற தாம் முயற்சிப்பதாக வட மாகாண ஆளுநர் இதன்போது உறுதியளித்துள்ளார்.