மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய போதைபொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் (காணொளி)

357 0

போதைப்பொருள் பாவனையற்ற நாட்டை உருவாக்கும் ஜனாதிபதியின் செயற்றிட்டங்களுக்கு அமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் தேசிய போதையொழிப்பு நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் களுவாஞ்சிகுடியில் தேசிய தேசிய போதைபொருள் ஒழிப்பு நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீமைகள், அதனைத்தடுக்கும் வழிமுறைகள் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.