நாடு பூராகவும் வைத்தியர்கள் முன்னெடுக்கும்24 மணி நேர பணிப்புறக்கணிப்பின் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.
நாடு பூராகவும் மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த வாரம் மாலபே தனியார் மருத்திவ கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட போது அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலீசார் தாக்குதலை நடத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருந்துவ சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனால் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரு சில வைத்தியர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர் இதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.