மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒழுக்கக் கோவை ஒன்றை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
இதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இவ்வாறு உருவாக்கப்படவுள்ள ஒழுக்கக் கோவை மூலமாக மாகாண சபை பிரதிநிதிகளின் பொறுப்புகள் மற்றும் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பதவிக் காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாகவும், அவற்றுக்கான தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது

