தேர்தல் சட்டத்தில் திருத்தம்

304 0

வயதான இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிக்க தகுதிபெறுவர் என்ற வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது.

தற்போதைய சட்டத்தின்படி ஒவ்வொரு ஜூன் மாதமும் தேர்தல் பதிவேடு திருத்தப்படும்போது 18 வயதை அடையாதவர்கள் வாக்களிக்க தகுதியை பெறுவதில்லை.

19 வயதிலேயே அவர்கள் அந்த தகுதியை பெறவேண்டியநிலை உள்ளது

இந்த நிலையில், புதிய சட்டத்தின்படி ஜூன் மாதத்துக்கு பின்னர் 18வயதை அடையும் ஒருவர் தேர்தல் ஒன்று நடைபெறும் வரையில் தம்மை வாக்காளராக பதிவுசெய்துக்கொள்ள முடியும் என சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் மூலம் வருடாந்தம் 2 லட்சம் முதல் இரண்டரை இலட்சம் வரையிலானவர்கள் வாக்காளர்களாக பதிவுபெறுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.