மட்டக்களப்பில் இன்று அதிகாலை 3 வர்த்தக நிலையங்களும், ஆலயம் ஒன்றும் வீடு ஒன்றும் உடைக்கப்பட்டு திருட்டு (காணொளி)

330 0

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வர்த்தக நிலையங்கள் மற்றும் ஆலயங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 3 வர்த்தக நிலையங்களும், ஆலயம் ஒன்றும் வீடு ஒன்றும் உடைக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நகரின் அரடி மற்றும் ஊறணி ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூன்றும், வீடு ஒன்றும் ஆலயம் ஒன்றின் களஞ்சியசாலையும் உடைக்கப்பட்டுள்ளது.

இதன் போது சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பொருட்களும் பணமும் திருடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மோப்ப நாய்கள் சகிதம் விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

குறித்த திருட்டுச் சம்பங்கள் தொடர்பில் சிசிரீவி கமெராக்களின் பதிவுகள் தொடர்பில் விசாணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.