கிளிநொச்சி கண்டாவளையில் நிலமெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் நடமாடும்சேவை

261 0

நிலமெஹெவர ஜனாதிபதிமக்கள்சேவைதேசியநிகழ்ச்சிதிட்டத்தின்நடமாடும்சேவைகிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தர்மபுரம் பாடசாலையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தன முதன்மை அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்நடமாடும்சேவைதேசியரீதியில்ஒவ்வொருமாவட்டத்திலும்நடைபெற்றுவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
இந்த  நிகழ்வில்  பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன,  சிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அ ருமைநாயகம் கண்டாவளை பிரதேச செயலாலளர் த.முகுந்தன், மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டதோடு  கண்டாவளை பிரதேசத்தை சேர்ந்த பெருமளவு மக்களும் கலந்துகொண்டனர்.