காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டது ஆழ்ந்த நிம்மதியை அளிக்கிறது. ஹமாஸ் இயக்கத்தின் பிடியில் சிக்கி சித்ரவதை செய்யப்பட்ட இஸ்ரேலிய பொறியாளர் ஏவிநேடனின் (Avinadan) நிலை என் நினைவில் நிற்கிறது.
அவரது குடும்பத்தினரை நான் சந்தித்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்த சித்ரவதையையும், வேதனையையும் எவராலும் உண்மையாகப் புரிந்து கொள்ள முடியாது. என் எண்ணங்கள் எப்போதும் அவர்களுடனேயே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

