பாடசாலை மாணவிகளிடம் ஆசிரியர் அங்க சேட்டை – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெற்றோர்கள் முறைப்பாடு!

49 0

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்கும்  மாணவிகளிடம் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் அங்க சேட்டையில் ஈடுபட்டமை தொடர்பில்  பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் மாணவிகளின் பெற்றோர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அப்பாடசாலையில் தரம் 10இல் கல்வி பயிலும் மாணவிகளிடம் குறித்த ஆசிரியர் தொடர்ச்சியாக அங்க சேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த விடயம்  தொடர்பில் சில மாணவிகளின் பெற்றோர்கள் பாடசாலை நிர்வாகத்தினருக்கு தெரிவித்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாணவிகளுக்கு நடந்த அநீதி தொடர்பில்  பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.