யுத்தத்தில் பலியான உறவுகளுக்கு கிளிநொச்சியில் ஆத்மசாந்தி பிரார்த்தனை

218 0

இறுதி யுத்தத்தின் போது பலியான அனைத்து உறவுகளுக்கும் ஆத்மசாந்தி வேண்டி கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினால்  இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்தின் போது பலியான உறவுகளை நினைந்து சுடரேற்றுவோம்;அவர்களின் கனவுகளை மனதெடுத்துஇந்த மண்ணின் மனிதர்களுக்கு வாழ்வளிப்போம்  என்ற அடிப்படையில்  சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு   இவ்வருடமும்  யுத்த காவலத்தில் இறந்த மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையை மேற்கொண்டுள்ளது.