UNHRC இந்நாட்டு பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் திலித்தின் X பதிவு

47 0

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பிரதிநிதிகள் குழு இந்நாட்டு வெளியுறவுக் கொள்கையை அழிவுகரமான முறையில் செயல்படுத்தியதை சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர மிகுந்த அதிர்ச்சியுடன் கண்டித்துள்ளார்.

 

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து திலித் ஜயவீர தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை இட்டு இதனை தெரிவித்தார்.

 

மனித உரிமைகள் பேரவையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள், 22 மில்லியன் மக்களுக்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும். மேலும் நட்பு நாடுகள் கூட இலங்கை தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு தீர்மானத்திற்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை வெளியிடுவது அதிர்ச்சியூட்டும் துரோகம் என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டார்.

 

சர்வதேச சமூகத்தின் முன் நாட்டின் முன்னுரிமைகள் குறைமதிப்படுத்தப்படுவது தற்போதைய அரசின் பலவீனமும் திறமையின்மையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.