களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
அத்துடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
பார ஊர்தி ஒன்றும், உந்துருளியொன்றும் மோதியதில் நேற்று பிற்பகல் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
அனர்த்தத்தில் உந்துருளியை செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, உந்துருளியில் பின்னால் அமர்ந்து சென்றவர், காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.