2009 ஆம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து, நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.
உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத வழிபாடு இன்று காலை 9.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான சர்வ மத பிரார்த்தனையில், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம், பௌத்த மத குருமார்கள் கலந்து கொண்டனர்.