வவுனியாவில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சுந்திரகுமார் கண்ணனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.
வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகர் பகுதியிலுள்ள கல்லாறு பகுதியில், இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றது.
இதன்போது மக்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அஞ்சலி நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.