இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையில் பேச்சுவார்த்தை

265 0

இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீட்பு ஹெலிகொப்டர்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை ஜெர்மனியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, ஜெர்மனி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 24 மீட்கு ஹெலிகொப்டர்கள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அனர்த்தங்களின் போது பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.